Wednesday, 18 January 2023

டெக்னோ ஃபான்டம் எக்ஸ்2 புரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ ஃபான்டம் எக்ஸ்2 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் ஃபான்டம் எக்ஸ்2 மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது.

சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017 வாக்கில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்நிலையில், டெக்னோ நிறுவனம் ஃபான்டம் எக்ஸ்2 புரோ என்ற ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. வெகு விரைவில் இந்த போன் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pv6kdAf
via IFTTT

No comments:

Post a Comment